search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி செய்தியால் பாதிப்பு"

    போர் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா கூறும் அனைத்து தகவல்களும் பொய் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



    ஐக்கிய அரபு எமிரேட்களின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது சில தினங்களுக்கு முன் அதிரடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்ற வாக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குற்றஞ்சாட்டினர்.

    இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தாக்குதல்களுக்கு ஈரான் தான் முழு காரணம் என்ற வாக்கில் அமெரிக்கா முழுக்க செய்திகள் பரவின. 



    போல்டன் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு தாக்குதல் தொடர்பாக எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

    இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா இதுபோன்ற நகைச்சுவை மிக்க வதந்திகளை பரப்புவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என ஈரான் வெளியுறவு மந்திரி அபாஸ் மௌசாவி தெரிவித்தார். 

    ஈரானின் அமைதி, கவனமான செயல்பாடுகள் பதற்றத்தை தூண்ட முற்படும் போல்டனின் திட்டத்தை பலிக்க விடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
    2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.



    இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.



    ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

    உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



    இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர். 



    இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
    கர்நாடக மாநிலத்தில் இளைஞர் மறைவை சுற்றி வெளியாகி வந்த புரளிகளுக்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.



    கர்நாடக மாநிலத்தின் பெலகவி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால், அடித்துக் கொல்லப்பட்டார் என வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், உண்மையை கண்டறிய பெலகவி காவல் துறை அதிரடி விசாரணையை துவங்கியது.

    விசாரணையில் உயிரிழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது முதல், இவர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால் கொல்லப்பட்டார் என்ற வாக்கில் தகவல்கள் பரவத் துவங்கின. 



    இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யான ஷோபா, இளைஞரின் படுகொலைக்கு காவல் துறை முறையான விசாரணை மேற்கொண்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

    இந்நிலையில், காவல் துறை ஆணையர் லோகேஷ் குமார் இளைஞரின் மறைவு தற்கொலை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். உயிரிழந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இளைஞரின் உடலில் தாக்கப்பட்டதை உணர்த்தும் காயங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இளைஞர் தற்கொலையை அவரது குடும்பத்தாரும் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு தொண்டர்கள் பாகிஸ்தான் கொடியசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    சமூக வலைதளமான ட்விட்டரில் விகாஸ் பான்டே என்பவர் பதிவிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர் பகிர்ந்து இருக்கும் வீடியோவில் ஒரு குழுவினர் கைகளில் பச்சை நிற கொடிகளை அசைத்தப்படி ராகுல் காந்தி சிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

    வீடியோவுடன் “இல்லை, இது பாகிஸ்தான் கிடையாது, ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சாக வேண்டும்!” என எழுதப்பட்டுள்ளது. இதே வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.



    இதே பதிவு ஃபேஸ்புக்கில் “தேர்தல் முடிவுகளுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றி இடம். ஒவ்வொரு இந்துவும் இதனை பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ சமூக வலைதள வாசிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    இது உண்மை தானா?

    வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இது போலி தகவல் ஆகும். முதலில் இந்த வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி கிடையாது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி ஆகும். இந்த கட்சி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதுதவிர இந்த வீடியோ வயநாட்டில் எடுக்கப்படவில்லை. இது கேரளாவின் காசர்கோட் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

    புகைப்படம்: இடதுபுறம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி வலதுபுறம் - பாகிஸ்தான் கொடி


    உண்மையில் போலி தலைப்பில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரமேஷ் உன்னித்தனுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது. இவர் காசர்கோட் பகுதியின் வேட்பாளர் ஆவார். இந்த வீடியோ காசர்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சேகரிப்பின் போது படமாக்கப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காசர்கோட் பகுதி பொது செயலாளர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை போன்று இந்த வீடியோ ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் வீடியோவில் இருந்தது பாகிஸ்தான் நாட்டு கொடியும் கிடையாது.

    வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்..,




    வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

    வைரலாகும் ஒரு நிமிட வீடியோவில் அறையினுள் அதிகாரிகள் சோதனை செய்வதும், அந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 



    பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவர்களின் விவரங்களை ஒருவர் இந்தி மொழியில் சேகரிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. பொது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட அரசியல் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி இருக்கிறது என்ற வாக்கில் தகவல்கள் பரப்பப்படுகிறது.

    உண்மையில் தற்சமயம் பரவி வரும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
    இந்திய பொது தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயன்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மறுப்பக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

    டி.என்.என். வொர்ல்டு எனும் பெயர் கொண்ட செய்தி நிறுவனம் சார்பில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்தது.  



    இதேபோன்று 2019 பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து நிலவும் சூழல் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மே 19 ஆம் தேதிக்கு பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சற்று ஓய்வெடுக்கலாம் என்றும் இந்த சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

    7.53 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. மேலும் அவர் வழங்கிய விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இவற்றை வைத்து பார்க்கும் போது வைரலான வீடியோ முற்றிலும் பொய் தகவல்களை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.



    டி.என்.என். வொர்ல்டு வலைதளம்

    வைரலான வீடியோவை வெளியிட்ட வலைதளம் டிரைகலர் நியூஸ் நெட்வொர்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த வலைதளத்தில் இந்திய பொது தேர்தல் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெற்று இருக்கின்றன. 

    இதே வலைதளத்தில் 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி வீடியோவில் அமெரிக்க வல்லுநர் ஒருவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதவிர இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பா.ஜ.க. கட்சி பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாகவும் இதே தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 

    இந்த வலைதளத்திற்கென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றிலும் பா.ஜ.க. கட்சிக்கு எதிரான தகவல்கள் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளன. டி.என்.என். வலைதளத்தின் உரிமையாளர் டயானா இரினா பிசின் ஆவார். இவர் ரோமானியாவை சேர்ந்தவர் ஆவார். நிறுவனத்தின் ஒற்றை பங்குதாரர் மற்றும் தலைவராக இவர் இருக்கிறார். அலுவலக முகவரி லண்டனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முகவரி போலியானதாகும். இந்த முகவரியை பயன்படுத்த ஆண்டு கட்டணம் செலுத்தினாலே போதுமானது.
    ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம்.
    ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின்  பெரும்பாலான நிலப்பரப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இதனை உண்மை போன்று சித்தரிக்கும் பெயர் பலகையின் புகைப்படமும் சமூக வலைத்தள வாசிகளால் அதிகம் பகிரப்படுகிறது.



    உண்மையில் அமெரிக்காவில் பெலாக்வா என்ற பெயர் கொண்ட நகரம் எதுவும் இல்லை என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான பெயர் பலகை கொண்ட புகைப்படம் நௌம் மக்னுசன் என்பவரால் வரையப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

    ஹைட்ரோகார்பன் பாதிப்பால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மனிதர்கள் வாழ தகுதியற்றதாக சித்தரிக்கும் மீம் சமூக வலைதளவாசிகளை இத்தனை நாட்களாக ஏமாற்றியிருப்பதை ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரவி வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச். இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டனர். 

    அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

    இவ்வாறு பகிரப்படும் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு, அதில் ரூ.399 சலுகை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறுந்தகவல்களின் படி இலவச சலுகை ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர் மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது. இந்த பக்கத்தி்ல் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில் பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

    இதனால் இலவசம் என்ற பெயரில் பரவும் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும். 

    இதனால் இதுபோன்ற குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களில் சென்று சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
    ஜம்மு காஷ்மீர் வங்கி பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்தது பற்றி பரவிய பொய் செய்திக்கு வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



    ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணிபுரிய அதிகாரிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியுற்றோர் மத்தியில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தோல்வியுற்றோர் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் சார்பில் வங்கி பணிகளில் சேர பின்பற்றப்பட்ட ஆட்சேர்ப்பு முறைகளில் முழு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தன. இதற்கு ஜம்மு காஷ்மீர் வங்கி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வங்கி பணிகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு பற்றி போட்டியாளர்களிடையே பொய் தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்பப்படும் தகவல்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. வங்கி பணிகளுக்கு தேவைப்படும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் சிறப்பு ஆணையம் பரிந்துரைத்த விதிகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர்.



    அந்த வகையில் ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் சிறப்பு ஆணையத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. ஆன்லைன் தேர்வில் ஆணையத்தின் விதிகள் முறையே பின்பற்றப்பட்டு அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வங்கி பணிகளி்ல் ஆட்சேர்ப்பு முறைகளில் நடைபெற்ற முழு வழிமுறைகளும் பொதுவாகவே பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் விண்ணப்பதாரர்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் ஆதாரமற்ற விவரங்களை நம்ப வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
    ×